Tuesday, August 7, 2012


தூக்கம் இன்றி தவிக்கும் இவள் விழிகள் பத்திரமாய் தூங்குவது எப்போது உன் மடி கொடு என் விழி தூக்கம் பத்திரமாகும் v.m..j.gowsi

மரண தண்டனை


நீ சற்று கோபமாக என்னை பார்த்தாலே உன்னிடம் பேச எண்ணிய என் வார்த்தைகள் மரண தண்டனை அனுபவித்து விடும் v.m.j.gowsi

பாவி இவள்


உன்னை விட்டு என் மனமும் விலகவில்லை என்னை விட்டு உன் காதலும் விலகவில்லை உன் மடியில் சோகம் மறக்க முடியாத பாவி இவள் v.m.j.gowsi

மரணத்தை நேசிப்பது


என்னை நீ நேசிக்காமல் இருந்திருந்தால் என்றோ மரணத்தை சந்தித்து இருப்பேன் உன்னை வெறுக்கவும் முடியவில்லை உன்னை வெறுக்காமல் எப்படி நான் மரணத்தை நேசிப்பது .......... v.m.j.gowsi

புனித தீர்த்தம்


நீ முதலில் எனக்கு முத்தமிட்டு எச்சில் நனைக்கும் இடத்தை ஊரடங்கு பிறப்பித்து பாதுகாப்பேன் புனித தீர்த்தம் பட்ட இடமாக v.m.j.gowsi

கவி படுவாள்


உனக்கான எனது தவத்தில் வரங்கள் சாபங்கள் ஆகி விட்டன புன்னகை கண்ணீர் ஆகி விட்டது ......கல்லறையிலும் கவி படுவாள் இந்த பாவி இல்லை இவள் ஆவி v.m.j.gowsi

அன்பின் தவம்


உன்னால் மட்டுமே படிக்கபட்ட அன்பின் தவம் இவளடா ....... உனக்காகவே இவள் அன்புடா v.m.j.gowsi

மண்ணால் செய்த சிற்பம் கூட கை கோக்கின்றது நிஜமான நாமோ நினைவுகளுடன் இங்கே பரிதவிக்கின்றோம் v.mm.j.gowsi

வலியை


வலியை என் அன்பால் உணர்கிறேன் உன் மீது அன்பு கொண்டு உரிமை கொள்ளும் பொழுது என் உணர்வுகளை நீ வார்த்தையால் கொல்லும் பொழுதுகளில் v.m.j.gowsi

உன் பிரிவில்


என் இதயத்திற்கு கண்கள் இல்லை அதனால் தான் உன்னை காணாமலே காதல் கொண்டேன் என் கண்களுக்கு உயிர் உண்டு அதனால் தான் உன் பிரிவில் கண்ணீர் வடிக்கின்றது v.m.j.gowsi

முதல் கவிதை


உனக்கான என் முதல் கவிதை உயிர் பெறவில்லை என் கைகளை நனைத்தது ஆம் எந்தன் கண்ணீர் உனக்கான முதல் கவிதை v.m.j.gowsi

நினைவுகள்


மரண வாசலை தொட நான் தயார் ஆனால் காத்திருக்கிறேன் உன் நினைவுகள் என் நெஞ்சை விட்டு
விலகும் நொடிக்காக v.m.j.gowsi

மனம் கேட்காமல்


மனம் கேட்காமல் மறு படி மறு படி உன்னை தேடி வருகிறேன் இறுதியில் நீ வார்த்தையால் நோகடிக்கும் பொழுது மனம் வெறுத்து இனி நீ வேண்டாம் என்றே போகிறேன் ஆனால் மீண்டும் மனம் கேட்காமல் ............v.m.j.gowsi

கெட்டி மேள


கெட்டி மேள சத்தம் கேட்டாலே மனம் குளிரும் எனக்கு எங்கே கெட்டி மேள சத்தம் கேட்டாலும் நம் காதல் அழுவதே கேட்க்கின்றது .v.m.j.gowsi